Categories: இந்தியா

வேளாண் புரட்சி செய்த ஏழை விவசாயி மரணம்..!

மகாராஷ்டிராவில் நான்டெட் மாவட்டத்தில் வசித்து வந்த விவசாயி தாதாஜி ராமாஜி கோப்ரகடே (வயது 65).  7 பேர் கொண்ட குடும்பத்திற்கு வருவாயை ஈட்டும் ஒரே நபரான இவர் கடந்த 1983ம் ஆண்டு தனது வயலில் விளைந்த 3 நெல் நாற்றுகளை சேமித்து அதில் இருந்து நெல் விதைகளை எடுத்துள்ளார்.

அதனை தொடர்ச்சியாக பயிர் செய்ததில் அதிக விளைச்சல், ருசியான அரிசி ஆகியவை கிடைத்தது.  சொர்ண சோனா என்ற பெயரில் விற்கப்பட்ட இந்த நெல் வகை வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்தியது.  எச்.எம்.டி. கைக்கெடிகாரங்கள் பிரபலம் அடைந்திருந்த நிலையில் இதனை விற்று எச்.எம்.டி. கைக்கெடிகாரம் ஒன்றை வாங்கினார்.

அந்த பெயரே நெல் வகைக்கு சூட்டப்பட்டது.  அந்த கைக்கெடிகாரத்தினை அணிந்தபடியே எங்கும் அவர் செல்வார்.  இவரது கண்டுபிடிப்புகளுக்காக தேசிய கண்டுபிடிப்பாளர் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3ந்தேதி இவர் மரணம் அடைந்து விட்டார்.  அவரது வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சென்றுள்ளார்.

இதுபற்றி ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விவசாயி மற்றும் விஞ்ஞானியான தாதாஜி கோப்ரகடே வேளாண்மையில் புரட்சி ஏற்படுத்திய எச்.எம்.டி. நெல் வகையை கண்டுபிடித்தவர்.  ஆனால் மக்களால் மறக்கப்பட்ட இவர் வறுமையில் உயிரிழந்து உள்ளார்.

நான்டெட்டில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கவும், அவரது சாதனைகளை நாடு கண்டுகொள்ளாததற்காக மன்னிப்பு கேட்கவும்  அவரது வீட்டிற்கு சென்றேன் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

11 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

13 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

49 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago