வழக்கறிஞர் என்று கூறி மோசடி செய்தவரின் வீட்டிலிருந்து கற்சிலைகள் கண்டெடுப்பு..!

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர் கேட்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம் வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

கடனை திருப்பி கேட்ட போது தன்னை வழக்கறிஞர் என்று கூறி சர்ச்சில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் வின்ஸ்டனின் நடத்தையில் சந்தேகமடைந்து ரமேஷ், விசாரித்ததில் அவர் வழக்கறிஞரே இல்லை என்பது தெரியவந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து ரமேஷின் கண்ணில் படாமல் போக்கு காட்டியுள்ளார் வின்ஸ்டன் சர்ச்சில்.  தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை வின்ஸ்டன் சர்ச்சில் வீட்டிற்கு சென்ற ரமேஷ், வீட்டிலிருந்தவர்களிடம் விசாரித்த போது சர்ச்சில் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதனை நம்பாத ரமேஷ், வீட்டின் ஒரு அறையில் சர்ச்சில் மறைந்திருப்பதாக எண்ணி கதவை உடைத்தார். அறையினுள்ளே சர்ச்சில் இருப்பார் என்று நுழைந்த ரமேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் கல்லால் செய்யப்பட்ட சாமி சிலைகள்  இருந்தன. ரமேஷ் அளித்த தகவலின் பேரில், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லால் ஆன 7 சாமி சிலைகள் உலோகத்தால் செய்யப்பட்ட அலங்கார வளைவு உள்ளிட்டவை சர்ச்சிலின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

30 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

34 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

52 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

55 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

55 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago