உத்திரப்பிரதேசத்தில் குசி நகரில், அந்த ஊரை சேர்ந்த முஸ்லிம் மணமகன் ஹைதர் அலி என்பவருக்கும், மணமகள் ஷபீலா என்பருக்கும் திருமண நிச்சயம் செய்தனர். திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும், நடைபெற்று வந்த , குசிநகர் போலீசாருக்கு யாரோ ஒருவர் அலைபேசி மூலம் ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி முஸ்லிம் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளனர்.
இதனையடுத்து கோபத்துடன் விரைந்து வந்த உத்திரப்பிரதேச போலீசார், மணமகளையும், மணமகனையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். உண்மை என்ன என்று விசாரிக்காமல், உறவினர்கள் கூறியதையும் கேட்காமல், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் மாப்பிள்ளையை அழைத்து சென்று அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சராமரியாக பெல்ட்டாலும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று போலீசாருக்கு தெரியவில்லை. உறவினர்கள் சொல்லியும் ஏற்க மறுத்த போலீசா,ர் மணமகள் வீட்டார் வீடியோகால் மூலம் போலீசாரிடம் பேசி, தாங்களும் முஸ்லிம் தான் என்பதை நிரூபித்து, ஆதார் அடையாளங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அதன்பின்தான் போலீசார் தாங்கள் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டனர். இதனையடுத்து போலீசார் மாப்பிள்ளை, பெண்ணை விடுவித்தனர். தங்கள் யாரையும் அடிக்கவில்லை என்றும், பொதுமக்கள் முன்னிலையில் தான் மணமகன் மணமகள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மணமகன் கூறுகையில், தன்னையும், ஷபீலாவையும் போலீசார் தனி அறையில் அடைத்து அடித்ததாகவும், தங்களது மத அடையாளத்தை காட்டுமாறு கூறியதாகவும் மணமகன் ஹைதர் அலி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இருவரும் மத அடையாளங்களை கூறியும் போலீசார் விட வில்லை. மாறாக ஷபீலா வீட்டிலிருந்து யாராவது வந்து அடையாளத்தை நிரூபித்தால் தான் விடுவோம் என்று சொன்னதாகவும், இதனையடுத்து ஷபீலாவின் அண்ணன் விரைந்து வந்து, தனது தங்கையையும், தன்னையும் அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…