மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்! அகதிகளை மிருகங்கள் என விமர்சனம்!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்,அகதிகளாக வரும் மக்களை மிருகங்கள் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கலிஃபோர்னியாவுக்கு அகதிகளாக வருபவர்களை பாதுகாக்கும் வகையில் சட்ட திட்டங்களை அம்மாநில அரசு வகுத்துள்ளது. இதுதொடர்பான கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உலகில் உள்ள குடியேற்றச் சட்டங்கள் முட்டாள் தனமான சட்டம் என்று விமர்சித்தார். எல்லை தாண்டி வந்து அமெரிக்காவிற்குள் நுழைபவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், எல்லை தாண்டுபவர்கள் மனிதர்கள் அல்ல, மிருகங்கள் என்றும் கூறினார். இதனால், ஒட்டுமொத்த அகதிகளையும் அவர் மிருகங்கள் என்று பேசி இருப்பதாக சர்ச்சை உருவெடுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment