Categories: இந்தியா

கேரள முதல்வர், எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கேரள அரசு முழு ஆதரவை அளித்ததுடன், சுமார் 240 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை தற்போது மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளது. ரெயில் பெட்டி தொழிற்சாலை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கும் திட்டம் இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் சமீபத்தில் கூறினார்.

மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று டெல்லியில் உள்ள ரெயில்வே தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பினராயி விஜயன், கேரள மக்களை மத்திய அரசு தண்டிப்பதாகவும், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி செய்வதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலைகளை பா.ஜ.க. ஆளும் அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் மத்திய அரசு தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

4 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

20 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

31 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

34 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago