காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது, 33-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வரைவுச் செயல்திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகச் செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாத நிலையில் மே மூன்றாம் தேதி மத்திய அரசு சார்பில் மேலும் பத்து நாட்கள் காலக்கெடு கோரப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றதால் வரைவுச் செயல் திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என மே எட்டாம் தேதி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது. அன்று நடைபெற்ற விசாரணையில் காவிரி தொடர்பான வரைவுச் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், பிரதமரும் அமைச்சர்களும் டெல்லி திரும்பியபின் ஒப்புதல் பெறப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மே 14ஆம் தேதி நீர்வள அமைச்சகச் செயலாளர் நேரில் ஆஜராகி வரைவுச் செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக வரைவுச் செயல் திட்டம் தாக்கல் செய்வதைத் தள்ளிப்போடுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மத்திய நீர்வள அமைச்சகச் செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வரைவுச் செயல் திட்டத்தைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…