ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சங்கர்கணேஷ் வரவேற்றுப் பேசினார்.
முன்னதாக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் நேரு பவனத்தில் ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணியராஜா உருவப்படத்தை திறந்த வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 32 மாவட்டமாக இருந்ததை நிர்வாக வசதிக்காக காங்கிரசில் 50 கட்சி மாவட்டமாக ஏற்படுத்தப்பட்டிருந்தது. நான் தலைவராக வந்தபிறகு அதனை 72 கட்சி மாவட்டமாக விரிவுபடுத்தி உள்ளேன்.
32 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதை 50 லட்சம் உறுப்பினர்களாக உயர்த்த வேண்டும் என்கிற இலக்கு வைத்து அதற்கான வழி முறைகளை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழத்தில் 60 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன. அனைத்து பூத் கமிட்டிக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். காமராஜர் ஆட்சியில்தான் தமிழகத்தில் ஏராளமான கனரக ஆலைகள், அணைக் கட்டுகள் திறக்கப்பட்டன. கிராமங்கள் தோறும் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொற்கால ஆட்சி நடந்தது.
தமிழகத்தில் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தே தீருவோம் என்று சபதம் எடுத்துக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உள்ள நிலவரப்படி தமிழகத்தில் காங்கிரஸ்தான் இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்கிறது. எனவே காமராஜரின் பொற்கால ஆட் சியை விரைவில் அமைத்தே தீருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் முன்னாள் நகரத் தலைவர் பீமராஜா நன்றி கூறினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, விஸ்வநாதன், மாநில மகளிரணி தலைவர் ஜான்சிராணி, மாநில செய்தி தொடர்பாளர் அந்தோணிராஜ், நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சிவகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், மகேஸ்வரன், அய்யனார், செல்வராஜ், ராதாகிருஷ்ணன், ராஜா ராம், பசும்பொன், மாவட்ட மகளிரணி தலைவி காளீஸ் வரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர்சித்திக், தொழிற்சங்கம் சார்பில் எச்.எம்.எஸ். கண்ணன், ஜ.என்.டி.யு.சி. பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…