திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் ,தி.மு.கவின் தலைவராக இருந்த கருணாநிதி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
மறைந்த கலஞரின் உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடத்திற்குப் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவராக அக்கட்சியை கட்டமைத்து வழிநடத்தி சென்றவர் கருணாநிதி அவருக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கப்படவுள்ளது. கலைஞர் கருணாநிதி சிலையோடு தி.மு.கவின் நிறுவனர் அண்ணாவின் பழைய சிலையும் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்படஉள்ளது.
இது மட்டுமல்லாமல் மிக பிரமாண்டமான தி.மு.க வின் கொடி கம்பம் ஒன்று அங்கு நிறுவப்பட உள்ளது. திமுகவின் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக சார்பில் பல்லேறு கட்சிகளுக்கு அழைக்க விடுக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மு.க.ஸ்டாலின் இந்த அழைப்பை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் ஏழைகளின் மக்கள் நல்வாழ்வுக்காகவும், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் தனது வாழ்க்கையே அர்ப்பணித்தவர் கலைஞர் கருணாநிதி.கருணாநிதி மண்ணின் மைந்தனாகஎன்றும் நினைவில் இருப்பார்.திமுக தலைமை அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பது அவருக்கு ஆற்றும் உரிய மரியாதையாகும்.இவ்வாறு தெரிவித்த அவர் உங்கள் அழைப்பை ஏற்பது எனக்கு கிடைத்த பெருமை என தெரிவித்துள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…