இந்தியா மீன்வளத்துறையில் சிறந்து விளங்கும் நாடாக உள்ளது. மீன்வளத்துறை மூலம் 14 மில்லியன் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. 2016-17ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியா 5.78 பில்லியன் மதிப்புள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத்துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
இதில் குறிப்பாக தமிழக மீன்வளத்துறையின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டத்தின் எல்லை சென்னை , திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடல் எல்லை நீள்கிறது. இதில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. 15 முக்கியமான துறை முகங்கள், சிறு மீன்பிடி துறைமுகங்களும் உள்ளன.
உலகிலேயே மீன்வளம் அதிகம் உள்ள பகுதியாக தமிழக கடலோர பகுதி அமைந்துள்ளது. வங்கக்கடல் , இந்திய பெருங்கடல், அரபிக்கடல் சங்கமிக்கும் மன்னார் வளைகுடா பகுதி மீன்வளம் மிகுந்த பகுதியாக உள்ளது.தமிழகத்தில் ஏரி , குளம், குட்டை , ஆறுகள் , கடல் என அனைத்து வகையான நீர் ஆதாரங்களிலும் 2 ஆயிரத்து 500 வகையான மீன் வகைகள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்ட மக்களுக்கு, மீன்பிடி தொழில் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. தமிழகத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் மீன்வளத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.எனவே இந்திய அளவில் தமிழக மீன்வளத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
dinasuvadu.com
சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் -…
சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும்…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்.…
சென்னை: அதிமுகவிற்குள் பிளவு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார். அதிமுகவிற்குள் பிளவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு…
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் (22 ஆம்…
சென்னை : நடிகர் கவனுக்கு கால் செய்து மாஸ்க் படத்தை நடிக்க ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் ஸ்டார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக…