Youtuber Avinash Rajput [file image]
நொய்டா: நொய்டாவில் மேற்கு பகுதியில் பிரபல யூடியூபரான அவினாஷ் ராஜ்புத் பிரதான சாலையின் நடுவே மர்ம நபர்களால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அவினாஷ் ராஜ்புத் எனும் யூடியூபர், தனது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கில் வீடியோவைப் பதிவிட்டு வருபவர், அவருக்கு நேர்ந்த இந்த கசப்பான சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு பேசி இருந்தார். அந்த வீடியோவில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவினாஷ் தனது சகோதரியை பார்க்க நொய்டா சென்று விட்டு திருப்பி வந்த போது கவுர் சிட்டி மாலுக்குச் சென்றுள்ளார், அங்கு சிலர் இவருக்காக காத்திருந்துள்ளனர். வணிக வளாகத்துக்குள் சென்ற யூடியூபர் அவினாஷையும் அவரது நண்பர்களையும் அங்கு இருந்த அந்த மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் அவரது நண்பர் ஒருவர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் அவினாஷின் காரையும் சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும், அவினாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அந்த 4 பேரும், யூடியூபர் அவினாஷ் ராஜ்புத் தங்கள் சாதியை புண்படுத்தும் வகையில் ஒரு வீடியோவில் பேசினார் என்றும் அதற்காக தான் அவரை தாக்கினோம் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…
மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…