உலக தடகள சாம்பியன்ஷிப் :இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அன்னு ராணி…!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி இடம் பெற்று உள்ளார். தலைநகர் தோஹாவில் 17வது உலக சாம்பியன்ஷிப் தடகளப் தற்போது  போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஈட்டி எறிதல் பிரிவில் 31பேரை  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் அன்னு ராணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
அன்னு ராணி முதல் வாய்ப்பில் 57.05 மீட்டர் தூரமும்  ,இரண்டாவது வாய்ப்பில் 62.43 மீட்டரும்  , மூன்றாவது வாய்ப்பில் 60.50 மீட்டர் தூரம் எறிந்தார். ஏ பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த அன்னு ராணி ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியர்  சாதனையை ராணி பெற்றுள்ளார்.