என்னை திருமணம் செய்து கொள்வீர்களா..? ரசிகருக்கு ரோஸ் கொடுத்து ஷாக் கொடுத்த ரோஹித்.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்கினார். முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் கலந்து கொள்ளாத அவர் மீண்டும் இரண்டாவது போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு ரோஹித் சர்மா விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

ரோஹித் சர்மா விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க திரண்டனர். அப்போது ரசிகர்களில் ஒருவர் ரோஹித் சர்மாவுடன்  செல்ஃபி எடுக்க தனது தொலைபேசியை எடுத்தார். ரசிகர் தன்னை பிடிப்பதை கவனித்த ரோஹித், அந்த ரசிகருக்கு கையில் இருந்த ரோஜா மலரை பரிசாக கொடுத்தார்.

அது மட்டுமின்றி ரோஜா பூவை கொடுத்த பிறகு ஜாலியாக ரோஹித் சர்மா அந்த ரசிகரிடம் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா..? என்று கேட்டார். இதனால் இன்ப அதிர்ச்சியான அந்த ரசிகர் சிரித்துக்கொண்டார். அதற்கான வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் இன்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்ரேலியா அணி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 3-வது ஒரு நாள் போட்டு வரும் புதன் கிழமை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment