மகத்தான ஆட்சியை தரக்கூடிய தலைவர் ஏன் பெரிய தலைவராக வரக்கூடாது – அமைச்சர் மனோ தங்கராஜ்

மகத்தான ஆட்சியை தரக்கூடிய தலைவர் ஏன் பெரிய தலைவராக வரக்கூடாது? என்ற நியாயமான கேள்வி பலரிடம் உள்ளது என அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி. 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும். மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியிருந்தார். 

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி 

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், மகத்தான வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராகக்கூடாது என பரூக் அப்துல்லா மட்டுமல்ல நாட்டில் பல தலைவர்களும், சாதாரண மக்களும் வைக்கக்கூடிய கேள்விதான். மகத்தான ஆட்சியை தரக்கூடிய தலைவர் ஏன் பெரிய தலைவராக வரக்கூடாது? என்ற நியாயமான கேள்வி பலரிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரோட்டில் இடைத்தேர்தலில் கனகிராஸ் முன்னிலையில் உள்ள நிலையில், இதுகுறித்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற திராவிட மாடல் தத்துவத்தினால் ஈரோடு கிழக்கில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது; இது சமூக நீதி கொள்கைக்கு கிடைத்துள்ள வெற்றி என தெரிவித்துள்ளார்.

Leave a Comment