Categories: Uncategory

பெண்களுக்கு புரதச்சத்து ஏன் மிக அவசியம் என்று தெரியுமா?

அதி வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகில் நாம் நமது உடலுக்கும் அதன் ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்துக்களை உணவின் வழியாக எடுத்துக் கொள்கிறோமா இல்லையா என்று சிந்தித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு விரைந்து போய்க் கொண்டிருக்கிறோம். இதனால், பலர் தனது ஆரோக்கியத்தை இள வயதிலேயே இழந்து, 20-30களிலேயே பல வியாதிகளை உடலில் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள், உடலின் சத்துக் குறைபாட்டினால் பூப்படைவது முதல் பிள்ளை பெறுவது வரை பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்த பதிப்பில் பெண்களுக்கு புரதச்சத்து என்பது ஏன் மிக அவசியமான ஒன்று என படித்து அறியலாம்.

சமீபத்திய ஆய்வு!

இந்தியாவின் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் 73% பேர் புரதக்குறைபாடு கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 62% கர்ப்பிணிகள் மற்றும் புதிய தாய்மார்கள், 8-15 வயது குழந்தைகளின் அன்னைகளில் 52% பெண்கள், 70-80% வேலைக்கு செல்லும் பெண்கள், 75% ஆண்கள் என இந்தியாவின் இத்தனை சதவிகித மக்களும் புரதக்குறைபாட்டினை கொண்டுள்ளனர்.

இந்த நிலையை மாற்ற மக்கள் புரதச்சத்தினை தங்கள் அன்றாட உணவினில் சேர்த்துக் கொள்ள முயல வேண்டும். இதை அனைவரும் தங்கள் வாழ்வில் செயலாற்ற வேண்டுமானால், அவர்கள் புரதத்தின் அவசியத்தை உணர வேண்டும். வாருங்கள் மனித உடலுக்கு புரதச்சத்தின் அவசியத்தை பற்றி பார்க்கலாம்.

ஹார்மோன் உற்பத்தி மற்றும் அதன் சமநிலை

புரதம் என்ற சத்துக்கள் அமினோ அமிலங்கள் எனும் சங்கிலிகளால் ஆனவை; இந்த சத்துக்கள் உடலில் சரியான அளவில் இருந்தால் தான் உடலால் சரியான மற்றும் ஒழுங்கான முறையில் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியும் மற்றும் உற்பத்தி செய்த ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும் புரதம் அவசியம்.

என்றும் இளமை!

மனித உடலின் வயதாகுதல் மற்றும் உடலின் மேம்பட்ட வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கு புரதம் என்பது மிக அவசியம். சரியான அளவில் புரதச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் நபர்களால் என்றும் இளமையாக இருக்க இயலும்.

எலும்புகளின் சக்தி மையம்

உடலில் எலும்புகள் என்பவை தான் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும்; ஏனெனில் எலும்புகள் இல்லை எனில் உடலுக்கு குறிப்பிட்ட வடிவம் ஏது?! அத்தகைய எலும்புகளின் வளர்ச்சிக்கும் சக்திக்கும் உதவுவது புரதச்சத்துக்களே!

பசியின்மை

புரதச் சத்துக்களை சரியான அளவில் உண்டு வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தவிர்த்து, உடலை எடை போடுவதில் இருந்து காக்கும். புரத்ச்சத்து நிரம்பிய உணவுகளை உட்கொண்டால், அதிக நேரம் வரை பசியை தாக்குப்பிடிக்க முடியும்.

செய்ய வேண்டியவை!

ஆகையால், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் புரதச்சத்தின் மகிமையை உணர்ந்து அச்சத்து நிரம்பிய உணவுகளை உண்ண முயலுங்கள்; பால், பன்னீர் என பால் சார்ந்த பொருட்கள் அதிக புரதச் சத்துக்களை கொண்டவை.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

6 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

40 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

49 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

57 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago