காமெடி என்ற பெயரில் என்ன பண்றீங்க? ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் கடக்க  கடக்க வீட்டில் ஏதாவது பெரிய விஷயமாக நடக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், அப்படி ஒரு சம்பவமும் இன்னும் நடைபெறவில்லை என்றே கூறலாம் .

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளிலேயே ஏதாவது பிரச்சினைகள் ஆர்வமான சில சம்பவங்கள் நடைபெறும். ஆனால், இந்த முறை அந்த மாதிரி எந்த சம்பவம் நடைபெறாமல் பிக் பாஸ் வீடே மிகவும் அமைதியான  வீடாக இருக்கிறது. இதற்கிடையில்,  நிகழ்ச்சியில் போட்டியாளர்கள்  மக்களை காமெடி செய்து சிரிக்க வைக்கிறோம் என்கிற பெயரில் சில விஷயங்களை செய்து வருவது நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்துள்ளது.

குறிப்பாக நேற்று மணி கூல் சுரேசை வைத்து காமெடி ஒன்றை செய்திருந்தார். அதில் ஒரு முறை தான் பாத்ரூமில் அமர்ந்திருந்த போது கூல் சுரேஷ் தமிழன்டா என்று கத்தியதாகவும் அதனால் தான் மிகவும் பயந்ததாகவும் சற்று கோச்சையாக பேசினார். இதனை கேட்ட ரவீனா மிகவும் சத்தமாக வயிறு குலுங்க, குலுங்க சிரித்தார்.

அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில். இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவர் சொன்ன காமெடி அந்த அளவிற்கு சிரிப்பே வரவில்லை எனவும் காமெடி என்ற பெயரில் என்னென்னவோ பண்றாங்க எனவும் கூறி வருகிறார்கள். அதைப்போல வழக்கமான பிக் பாஸ் நிகழ்ச்சியை போல இல்ல எனவும் சற்று மொக்கையாக இருக்கிறது எனவும் கூறிவருகிறார்கள்.

மேலும், ஏற்கனவே மணி மற்றும் ரவீனா பற்றிய கிசு கிசு பரவி வரும் நிலையில், இப்போது மணி சொன்ன மொக்க ஜோக்கிற்கு கூட சிரிப்பது மேலும் ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்துள்ளது.  ஏற்கனவே, கடைசியாக ரவீனா மணிகண்டன் கையை கடித்தார். அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.