சரி இனிமேல்…இப்படி நடக்காதுனு நம்புறேன்.. எதற்கும் துணிந்தவன் இயக்குனர் ஓபன் டாக்.?

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

எப்போதும் இயக்குனர் பாண்டிராஜ் படமென்றால் படத்தில் நடிகர்கள் அதிக பேர் இருப்பார்கள். அது அவரது முதல் படமான பசங்க படத்தில் இருந்தே தொடங்கி முக்காவாசி படம் அப்படி தான் இருக்கிறது. இறுதியாக எதற்கும் துணிந்தவன் என அனைத்திலும் நடிகர்கள் அதிகம். ஆனால், சிம்பு நடித்த இது நம்ம ஆளு திரைப்படம் மட்டும் தான் நடிகர்கள் குறைவு என்று தெரிகிறது.

அண்மையில், இதுக்கு குறித்து பேட்டியளித்த இயக்குனர் பாண்டிராஜ், நான் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் இந்த படத்தில் கம்மியான கதாபாத்திரங்களை வைத்தே படமெடுக்க வேண்டும் என நினைக்கிறன். ஆனால், நான் ஒன்னு நினைக்க அது ஒன்னு நடக்கிறது . ஆம்… கதைக்களம் அப்படி விடுவதில்லை என்றார்.

இதையும் படியுங்களேன்-அப்பாவிடம் வருத்தப்பட்ட மகன்..! ஓ காரணம் இதுதானா.?!

தற்போது, இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்திலும் அதிக நடிகர்கள் தான். அதனால், அடுத்த படம் குறைவான ஆட்களை வைத்து ஒரு படம் எழுத இருக்கிறேன். ஆனால், என்ன ஆகும் என தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம்.