விக்ரம் 3-வது பாகத்தில் சூர்யா.! உண்மையை போட்டுடைத்த ஆண்டவர்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்” இந்த படத்தில் சூர்யா, பகத் பாசில் விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால், சூர்யா சிறிய கேஸ்ட்ரோலில் 10 நிமிடம் வருவார் என தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி கொண்டேதான் செல்கிறது. அதுமட்டுமில்லாமல், படத்தில் சூர்யாவும் நடித்துள்ளதால் சூர்யா ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில்,கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேட்டிகொடுத்த கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார் அதில், விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கடைசி நிமிடத்தில் தோன்றி கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார். மேலும் அந்த கதாபாத்திரம் விக்ரம் மூன்றாம் பாகத்திற்கான தொடக்கமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். “

அதாவது, இதற்கு முன்பு கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் இரண்டாவது பாகம் இப்பொது லோகேஷ் எடுத்துள்ளாராம். இது இரண்டாம் பாகம் அடுத்ததாக சூர்யாவை வைத்து எடுக்கப்போவது மூன்றாவது பாகம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment