கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல்…உருக்கமாக பேசிய பிரபலங்கள்!

நடிகராகவும், அரசியல் தலைவராகவும் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி  காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவருடைய மறைவுக்கு மக்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க தங்களுடைய அஞ்சலியை  செலுத்தினர்.  நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலரும் கேப்டனின் நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களுடைய மரியாதையையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல்  கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

நான் பாஜகவில் இணைந்துவிட்டேனா,? பிரதமரை சந்தித்த பின் அர்ஜுன் பேட்டி.!

அதன்படி, நேற்று ஜனவரி ( 19) சென்னை காமராஜர் அரங்கத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த இரங்கல் கூட்டத்திற்கு விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் , கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

இதில் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக கமல்ஹாசன், விஷால், கருணாஸ், ஆகியோர் கண்கலங்கி விஜயகாந்த் பற்றி பேசினார். அதனை போலவே, விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் மேடையில் கண்ணீர் மல்க பேசினார்கள்.