மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் இருசக்கர வாகனம் திருட்டு..!

சேலத்தில் டாஸ்மாக் மதுக்கூடங்களில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் திருடப்படுவது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், வசந்தகுமார், பாஸ்கர், தீனதயாளன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 

அதில் மூவரும் இரவு நேரங்களில் டாஸ்மாக் மதுபான கடையில் போதையில் இருப்பவர்களின் அருகில் அமர்ந்து, சாவிகளை எடுத்து இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், 10 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

Leave a Comment