சென்னையில் டிவி விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை பலி.!

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவர் தனது வீட்டில் உள்ள பழைய மாடல் டிவியை நாற்காலியில் வைத்து இருந்துள்ளார்.

அவரது 2 வயது பெண் குழந்தை நாஷியா பாத்திமா டிவி அருகே படுத்துறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டிவி குழந்தை மீது விழுந்துள்ளது.

டிவி விழுந்ததில் குழந்தையின் மூக்கு பகுதி பலமாக அடிபட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், குழந்தை முன்கூட்டியே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.