இன்றைய ஆட்டம்..! ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதல்!

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்- பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஆட்டம் காணுகிறது. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள  பர்சபரா மைதானத்தில் நடைபெறுகிறது. ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், முக்கிய வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ககிசோ ரபாடா இல்லாத போதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது முதல் ஆட்டத்தில் வென்றது.அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் சிறப்பான பார்மில் உள்ளது. ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது முந்தைய ஆட்டத்தில் வலுவான தொடக்கத்தை வழங்கினர், சஞ்சு சாம்சனும் அரை சதம் விளாசினார். எனவே, இந்த இரண்டு அணியும் இந்த சீசன் விளையாடிய முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பதிக்க வேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் களமிறங்குகிறது. எனவே இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், இதற்குமுன்பு இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 24 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 10 முறை பஞ்சாப் கிங்ஸ் அணியும், 14-முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment