மினி டைடல் பார்க்… ஓசூர் தொழிற்சாலை… பல்வேறு தொழில் நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு தொழில்முறை நிகழ்வுகளை காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். 

இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு புதிய நிகழ்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி  வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். இதில் சேலம் டைடல் பார்க் , ஓசூர் சிப்காட் தொழிற்சாலை என பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது.

மினி டைடல் பார்க் : வேலூர் மாவட்டத்தில் புதியதாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

ஓசூர் சிப்காட் தொழிற்சாலை : அடுத்து, ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதி உயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையையும் திறந்து வைக்க உள்ளார். அடுத்து, சென்னையில் நிறுவப்பட்டுள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ஓலா ஒப்பந்தம் : இதனை அடுத்து, தமிழக அரசு மற்றும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று கையெழுத்தாக உள்ளது.

Leave a Comment