கொரோனா பரவல் அதிகரிப்பு.! நாடுமுழுவதும் 2 நாள் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை.!

இன்றும் நாளையும் நாடுமுழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் என்பது சற்று அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் முன்னெச்சரிக்கடன், பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு ஒத்திகை :

தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை எதிர்கொள்வதற்காக இரண்டு நாள் மருத்துவ ஒத்திகையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று (ஏப்ரல் 10) மற்றும் நாளை (ஏப்ரல் 11) ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒத்திகை நடைபெற உள்ளது.

கையிருப்பு அளவுகள் :

இந்த ஒத்திகையின் போது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்கள், ஆக்ஸிஜன் கையிருப்பு அளவு, மருந்துகள் கையிருப்பு ஆகியவை சோதித்து அறியப்படும். இதன் மூலம்  கொரோனா பரவல் திடீரெனெ அதிகரித்துவிட்டால், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment