TNPSC: குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்!

குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். அதன்படி, 32 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு 2023 நவம்பரிலும், எழுத்து தேர்வு 2024 ஜூலையிலும் நடத்தப்படும். இதுபோன்று குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் 2023ல் வெளியிடப்பட்டு, 2024 பிப்ரவரியில் எழுத்து தேர்வு நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ் தேர்வாணையம் அறிவித்துள்ளது.