இடைதேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.? தமாகா தலைவருடன் இன்று பேச்சுவார்த்தை.!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவின் காரணமாக நேற்று, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடக்கம் எனவும், பிப்ரவரி  27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளை களமிறக்கின. அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா)  சார்பில் யுவராஜா என்பவர் போட்டியிட்டார்.

இந்நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடுமா அல்லது மீண்டும் தமாகா கட்சிக்கு வாய்ப்பளிக்க படுமா என்கிற நிலையில், இன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பெரும்பாலும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக அதன் கூட்டணி கட்சியான தமாகா கட்சியை களமிறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Comment