T20 World Cup 2022:இந்தியா vs பாக் போட்டிக்கான டிக்கெட்கள் ஐந்தே நிமிடத்தில் விற்று தீர்ந்தது

டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டத்திற்கான கூடுதலாக திறக்கப்பட்ட நிற்கும் அறை டிக்கெட்கள் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே சுவாரஸ்யத்திற்கும், ஆரவாரத்திற்கும் எப்பொழுதும் குறைவிருக்காது. ஆனால் 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நேரடியாக பாகிஸ்தான் அணியுடன் எந்தவித தொடரிலும் விளையாடுவதில்லை.

உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற பொதுவான போட்டித்தொடர்களில் மட்டுமே இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. அப்படி நடக்கின்ற இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் எதிர்பார்ப்பிற்கு பஞ்சமா என்ன?

அக்டோபர் 16 இல் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போட்டி மெல்போர்னில் அக்டோபர் 23 அன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான கூடுதல் நிற்கும் அறை டிக்கெட்கள் விற்பனைக்கு வந்த ஐந்து  நிமிடங்களில் விற்றுத்தீர்ந்து விட்டதாக ஐசிசி தகவல் தெரிவித்திருக்கிறது.

மேலும் விரைவில் அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளம் திறக்கப்படும் என்றும் அங்கு ரசிகர்கள் தங்களது டிக்கெட்களுக்கு நிகரான டிக்கெட்டுகளை பரிமாறிக் கொள்ளலாம் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது

Leave a Comment