அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை..! இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை ஏற்பட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் தற்பொழுது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.