தூத்துக்குடி மாவட்ட எஸ்.ஐ உயிரிழப்பு.! பின்னால் வந்த லாரி மோதியதால் விபரீதம்.!

கோவில்பட்டி சிறப்பு எஸ்.ஐ முத்துராஜ் இன்று காலை விபத்தில் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) பணியாற்றி வந்தவர் முத்துராஜ். இவர் இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார்.

அப்போது, தலைமை தபால் அலுவலகம் அருகே பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது, அந்த சமயம் பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது என கூறப்பட்டுள்ளது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Comment