இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம், தொடர்ந்து இதுகுறித்து பேசினால் நன்றாக இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்கிற விமர்சனம் தான் அது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது பேசிய அவர், சிதம்பரம் தீட்சிதர் விவகாரம் குறித்து பேசியாக அவர், இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது. சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகள் திருமண காலத்தில் விமர்சனம் செய்யாமல் முற்றுப்புள்ளி வைக்கிறோம் என் தெரிவித்துள்ளார்.

 மேலும்,தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்கிற விமர்சனம் தான் அது. வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்.  முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் செய்திருந்தார்.  எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்க்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.