இனிமேல் டெலிவரி ஊழியராக இந்த சான்றிதழ் அவசியம்.
கடந்த வாரம், சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் 68 புல்லட்டுகளை திருடிய கும்பல் பொலிஸாரின் கைவசம் சிக்கியது. இந்த திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பல், போலிஸாருக்கு சந்தேகம் வராமல் இருக்க , ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல செயல்பட்டு, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில்,திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் பல டெலிவரி ஊழியர்கள் சிக்கியுள்ளனர். உணவை கொண்டு செல்வது போல, போதை பொருட்களையும் கொண்டு சென்றவர்கள் பலர் பொலிஸாரின் கைவசம் சிக்கினார். அவர்களில், பலர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஊழியராகவும், சிலர் முன்னர் ஊழியராக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இப்படிப்பட்ட சம்பவங்களை தடுப்பதற்காக, டெலிவரி ஊழியர்களை பணியமர்த்தும் முன்பு, ஆவார்கள் காவல்துறை நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நன்னடத்தை சான்றிதழை, காவல்துறையின் இணைய சேவையான, CCTNS மூலம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…