சாதி, மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் இயக்கத்திற்கு தமிழகத்தில் இடமில்லை.! – திருமாவளவன்.!

சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் எந்த ஒரு இயக்கத்திற்கு தமிழகத்தில் இடம் கிடையாது.-  என விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். 

சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் என இடதுசாரிகள் என பலரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர்.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து தமிழகம் முழுவதும் பேரணியில் ஈடுப்பட்டனர்.

இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், ‘ இந்திய வரலாற்றில் இவ்வளவு இயக்கங்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள் தமிழகத்தை  தவிர வேறு எதுவுமில்லை.’ என பெருமையாக கூறினார்.

மேலும், பேசுகையில், ‘ சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் எந்த ஒரு இயக்கத்திற்கு தமிழகத்தில் இடம் கிடையாது.’ என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்குந்தார்.

Leave a Comment