இரக்கமற்ற செயல்..! பிறந்த குழந்தையை ரூ.4.5 லட்சத்திற்கு விற்ற தாய்..!

ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த குழந்தையை ரூ.4.5 லட்சத்திற்கு விற்ற இரக்கமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் பிறந்த ஆண் குழந்தையை பிரசவத்திற்குப் பிறகு குழந்தையின் தாய் ரூ.4.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். சமீபத்தில் சத்ரா மாவட்டத்தில் ஆஷா தேவி என்ற பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். இதையடுத்து ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பட்காகோன் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சத்ரா மற்றும் பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்த இரு தரகர்களுடன் புதிதாகப் பிறந்த குழந்தைக்காக ரூ.4.5 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த ஒப்பந்ததையடுத்து குழந்தையின் தாய் ஆஷா தேவியிடம் ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3.5 லட்சம் குழந்தையை விற்க உதவிய தரகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குழந்தையை விற்பது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொகாரோவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டனர்.

பின்னர் குழந்தையின் தாய் ஆஷா தேவியை கைது செய்தனர். ஆஷா தேவி கைது செய்யப்பட்டதை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை (11 பேர்) போலீசார் கைது செய்தனர். ஆஷா தேவியிடம் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment