’காக்கா முட்டை’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகைகள் கொள்ளை

’காக்கா முட்டை’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளவர் மணிகண்டன். இவர் மதுரை மாவட்டம் உசுலம்பட்டியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள எழில் நகரில் மணிகண்டனின் வீடு அமைந்துள்ளது.

இந்த நிலையில் அவரின் பூட்டி இருந்த வீட்டில், பூட்டை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பீரோவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பீரோவில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.!

இயக்குநர் மணிகண்டன் தற்போதைக்கு சென்னையில் இருக்கிறார், இதனால் உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால் மட்டுமே, எவ்வளவு பணம், நகை திருடு போயுள்ளது என்பது குறித்த மிக சரியான தகவல் தெரியவரும் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Comment