பேருந்தில் கட்டணமின்றி உபகரணங்களை நாடக கலைஞர்கள் எடுத்து செல்லலாம் -தமிழக அரசு!

பேருந்தில் நாடக கலைஞர்கள் தங்களின் உபகரணங்களை கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் துவக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள பல கோடிக்கணக்கான ஜனங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பல கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு தொழில் செய்பவர்கள் நலிவடைந்த நிலையில் காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக நாடக கலைஞர்களின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

இந்த சமயங்களில் பேருந்தில் தங்களது உபகரணங்களை எடுத்துச் செல்லக்கூடிய நாடக கலைஞர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதிலும் உள்ள நாடக கலைஞர்கள் அவர்களது இசைக்கருவிகள், கலைப் பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கு இலவசமாக பேருந்தில் செல்லலாம் என அனுமதி அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment