லக்கேஜ் திருடப்பட்ட வழக்கில் பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2015இல் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ரணக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது அந்த பெண்ணின் உடமைகள் திருடப்பட்டது. பெண் உடனே டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். அவர் தொலைத்த உடமைகளில் உடைகள் தவிர்த்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பஷ்மினா சால்வை உட்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் இது குறித்து காவல் துறையில் புகாரளித்த போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவர் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த மனுவை ஆராய்ந்த ஆணையம் அந்த பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்தப் பெண்னிற்கு மன வேதனை மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.30,000 வழங்கவும் உத்தரவிட்டது.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…