ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 59,740 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 85 புள்ளிகள் அதிகரித்து 59,740 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,649 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 59,873 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 85 புள்ளிகள் என உயர்ந்து 59,740 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 17,649 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,655 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

விப்ரோ லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, ஆக்சிஸ் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.