சினிமா

இசை நிகழ்ச்சியில் பாடல் ‘அப்பாகிட்ட அனுமதி வாங்கியாச்சு’! கார்த்திக் ராஜா பேச்சு!

கார்த்திக் ராஜா : இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் கிங் ஆப் கிங்ஸ் 2024 என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.  இந்த இசை நிகழ்ச்சியை ‘பி.கே., என்டர்டெயின்மென்ட் நிறுவனமும்,  ‘யெஸ் பாஸ்’ நிறுவனமும் இணைந்து வழங்க இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜாவின் தந்தை இளையராஜாவின் பாடல்களும் பாட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுத் தான் இசை நிகழ்ச்சியில் பாட உள்ளேன் என செய்தியார்களை சந்தித்தபோது கார்த்திக் ராஜா கூறியுள்ளார். இது குறித்து பேசிய கார்த்திக் ராஜா ” முன்னதாக இந்த இசை நிகழ்ச்சியை நாங்கள் மலேசியாவில் நடத்த தான் திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால், அங்கு நடத்தமுடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும். அப்பா இளையராஜாவுடைய பாடல்களும் பாடபோகிறோம். சரியாக காப்புரிமை குறித்து ஆய்வு செய்து எந்த பாடல்களை பாடலாம் என்பதை சரியாகவும் தேர்வு செய்து இருக்கிறேன். அப்பாவிடம் சரியான அனுமதி பெற்று தான் பாடல்களை பாட இருக்கிறேன். முக்கியமாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று பாடப்போகிறேன்.

இசை நிகழ்ச்சி 3 முதல் 4 மணி நேரம் நடைபெறும் கிட்டத்தட்ட 35 பாடல்கள் தேர்வு செய்து இருக்கிறோம். அனைத்தும் கண்டிப்பாக பிடிக்கும். இப்போது நான் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். அடுத்த 2 மாதங்களில் நான் இசையமைத்துள்ள 2 படங்கள் வெளியாக உள்ளது” எனவும் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

Recent Posts

அதுக்காக ‘லிப் லாக்’ பண்ணமாட்டேன்! அது இருந்தால் ஓகே..ரகுல் ப்ரீத் சிங் பேச்சு!

ரகுல் ப்ரீத் சிங் : சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் கதைகளுக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவையோ அந்த காட்சிகளில் தைரியமாக நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. மேலும்,…

13 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மாயாவதி.!

சென்னை : பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை தனது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு…

15 mins ago

பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! 8 பேர் கைது.!

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன்…

32 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியை தருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் !

மு.க.ஸ்டாலின் : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ்…

46 mins ago

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

11 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

11 hours ago