லடாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நிலைமை ஆபத்தானதாக உள்ளது.! வெளியுறவு அமைச்சர் கருத்து.!

லடாக் பகுதியில் இந்தியா – சீனா இடையே நிலைமை ஆபத்தான  முறையிலும், அந்த உறவு என்பது முறியக்கூடிய வகையில் பலவீனமாக உள்ளது. அமைச்சர் ஜெய்சங்கர். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இன்று நடைபெற்ற ஒரு பத்திரிகை நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியா – சீனா எல்லை விவகாரம் குறித்து பேசினார்.

எல்லை பகுதி :

லடாக் பகுதியில் இந்தியா – சீனா இடையே நிலைமை ஆபத்தான  முறையிலும், அந்த உறவு என்பது முறியக்கூடிய வகையில் பலவீனமாக உள்ளது எனவும்  மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், நாங்கள் (இந்தியா) அமைதியை விரும்புகிறோம். எங்களால் அமைதியை மீற முடியாது. லடாக் எல்லை பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அதிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – சீனா :

இதற்கு முன்னர் இந்தியா – சீனா எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment