வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் பாலமுருகன். மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி காளீஸ்வரி (35), மகள் மங்கையர்திலகம் (12), மகன் அபிஷேக் (8) மூவரும், சிவகங்கை மாட்டம்,குறிஞ்சி நகர் பகுதியில் கார்த்திக்கேயன் வீட்டில், ஒத்திக்கு குடியிருந்துள்ளார்.
வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனமுடைந்த காளீஸ்வரி அவரது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காளீஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக, அந்த வீட்டின் சுவற்றில், என் மரணத்திற்கு காரணம் கார்த்திக்கேயன், நாகஜோதி மற்றும் சுந்தரி என எழுதி வைத்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் கார்த்திக்கேயன் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…