கொரோனாவை தொடர்ந்து தமிழகத்தை அச்சுறுத்தும் அடுத்த பாதிப்பு!

கொரோனாவை தொடர்ந்து தமிழகத்தை அச்சுறுத்தும் அடுத்த பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இதுவரை தமிழகத்தில், 1,99,749 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,320 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.