ட்ரோன் பறந்த விவகாரம்..! சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை..போலீஸார் தகவல்..!

தீவிர தேடுதல் நடத்தியும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்தில் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை  பிரதமர் மோடியின் வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலை ட்ரோன் பறந்ததையடுத்து, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் டெல்லி காவல்துறை பிரதமர் வீட்டின் அருகில் உள்ள பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்பின், தீவிர தேடுதல் நடத்தியும், அதுபோன்ற பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையையும் (ஏடிசி) தொடர்பு கொண்டாலும், பிரதமரின் இல்லத்துக்கு அருகில் பறக்கும் பொருள் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.