வணிகம்

நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.432 லட்சம் கோடியாக உயர்வு! பங்குசந்தையில் புதிய சாதனை.!!

பங்குச்சந்தை: நிஃப்டி அதன் வாழ்நாள் அதிகபட்சமாக  159 புள்ளிகள் உயர்ந்து, 23,481 புள்ளிகளை எட்டி இருக்கிறது.  அதே நேரம் சென்செக்ஸ் 539 புள்ளிகள் அதிகரித்து 77, 145 என எட்டியிருக்கிறது.

நேற்றைய வர்த்தக நாள் முடிவில்  NSE நிஃப்டி  23,322 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், தற்போது இன்றைய வர்த்தக நாள் திறக்கும் பொழுதே 159 புள்ளிகள் உயர்ந்தது 23,481 புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது. இது வரை இல்லாத அளவில் வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி புள்ளிகள் உச்சம் தொட்டு வரலாறு படைத்துள்ளது.

மேலும், பிஎஸ்இ (BSE Nifty) நிஃப்டியை பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.432.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மும்பை பங்கு சந்தை குறியீடான (BSE Sensex) சென்செக்ஸ் வர்த்தகநாளின் தொடக்கத்தில் 539 புள்ளிகள் அதிகரித்து 77,145 என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது.

அதன் பின் சிறுதளவு சரிவை கண்டு தற்போது சென்செக்ஸ் மீண்டும் 191.88 புள்ளிகள் அதிகரித்து 76,798.45 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரம், NSE நிஃப்டியும் சிறிதளவு புள்ளிகள் சரிவை கண்டு தற்போது 10.53 மணி அளவில் 57.50 புள்ளிகள் அதிகரித்து 23,380.45 புள்ளிகளில் எகிறி இருக்கிறது.

HUL மற்றும் ICCI வங்கியைத் தவிர அனைத்து சென்செக்ஸ் பங்குகளும் நல்லதொரு வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக நெஸ்லே, விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

3 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

4 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

5 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

5 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

5 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

5 hours ago