நாமினேஷனில் கடைசியாக உள்ள 3 பேர்.!வெளியேறுபவர் யாராக இருக்கும்.?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக நாமினேஷனில் 3 பேர் உள்ள நிலையில் அதில் யார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என்பதை கமல்ஹாசன் கூறவுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினிஷேனில் அனிதா , ரமேஷ், பாலாஜி,ஆரி,சோம்,சனம்,நிஷா ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதில் அனிதா நாமினேஷன் டாப்பிள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை அவருக்கு பதிலாக நேரடியாக நாமினேட் செய்தார் .

இதிலிருந்து நேற்றைய எபிசோடில் பாலாஜி மற்றும் ஆரியை கமல்ஹாசன் அவர்கள் வீட்டில் தக்க வைத்துக் கொண்டார் . இந்த நிலையில் இன்றைய பர்ஸ்ட் புரோமோவில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்பதை எவிக்ஷன் கார்டை உபயோகித்து சொல்லவுள்ளார் .நாமினேஷனில் கடைசியாக ஜித்தன் ரமேஷ் ,நிஷா மற்றும் சம்யுக்தா ஆகியோர் உள்ளனர் . இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்று யார் வெளியேறுவார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.ஆனால் சமூக ஊடகங்களில் இந்த வாரம் சம்யுக்தா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.