விளையாட்டு

வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி ..!

டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வலுவான இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றில் மோதியது.

நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான போட்டியில் இன்று இந்தியா அணியும், வங்கதேச அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று ரன்களை மெதுவாக எடுக்க ஆரம்பித்த தருணத்தில் ரோஹித் சர்மா 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அதன்பின் விராட் கோலி 37 ரன்கள், சூரியகுமார் யாதவ் 6 ரன்கள் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. அதற்கு பிறகு சிவம துபேவும், ரிஷப் பண்டும் இணைந்து சற்று ரன்களை எடுத்தனர்.

பின், சிவம் துபேவும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து ரன்களை குவித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதில், ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 27 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து வங்கதேச அணி, பேட்டிங் களமிறங்கி விளையாடியது. தொடக்கத்தில் இருந்தே சற்று நிதானமாக விளையாடி, விக்கெட்டையும் இழந்ததால் மிடில் ஓவர்களில் ரன்ஸ் எடுக்க ஆளில்லாமல் தடுமாறியது.

மேலும், போக போக பந்து குறைவாகவும், ரன்கள் அதிகமாகவும் இருந்ததால் அடிக்க முயற்சித்து விக்கெட்டையும் இழந்து வந்தது வங்கதேச அணி. இதனால், வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் குலதீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணி அரை இறுதி சுற்றில் ஒரு காலை எடுத்து வைத்துள்ளது.

மேலும், இந்த தோல்வியின் மூலம் வங்கதேச அணி இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

7 hours ago