தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சோகம்.. பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு.!

Illicit Liquor: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டதாக தெரிகிறது. அதனை அருந்தியதால் நேற்று பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முதலில், நேற்று நிகழ்ந்த உயிரிழப்புகள் விஷச்சாராயத்தால் நிகழவில்லை எனவும், வேறு உடல் உபாதைகள் இருந்ததாகவும் கூறியிருந்த்தார். இதனை அடுத்தும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சி விவகாரம் பூதாகரமாக மாறியது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய சுரேஷ், பிரவீன்,  ராஜேந்திரன் மகன் சுரேஷ் , சேகா், கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா,  மணிகண்டன், தனகோடி, சுப்பிரமணி, நாராயணசாமி , ராமு ,  ஆறுமுகம் என பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர் . மேலும் பலர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பிரச்சனையின் தீவிரம் அறிந்த தமிழக அரசு உடனடியாக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டு எம்.எஸ்.பிரசாந்த் புதிய ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். மாவட்ட எஸ்பி சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய எஸ்.பியாக  ரஜத் சதுர்வேதி பணியமர்த்தப்பட்டார். மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை விசாரிக்க வழக்கு சிபிசிஐடி நேற்று சம்பவம் தொடர்பாக உடனடியாக அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து வருகிறது. இன்று காலை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுவரை கள்ளசாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டார். தற்போது வெளியான தகவலின்படி, இதுவரை 33 பேர் கள்ளசாராயத்திற்கு பலியாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Recent Posts

‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…

15 hours ago

கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…

15 hours ago

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…

15 hours ago

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…

ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…

15 hours ago

நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்! வைரல் வீடியோ…

ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…

15 hours ago

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…

15 hours ago