பண மோசடி வழக்கு : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தள்ளிவைப்பு.!

பணமோசடி புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி , அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் பல்வேறு நபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக அவர் பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

மேல்முறையீடு : இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டு இருந்து, அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறையினர் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கு ஒத்திவைப்பு : இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று  விசாரணைக்கு வந்த போது,  வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment