#Breaking:உச்சநீதிமன்ற 9 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு…!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பதவியேற்று வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் தற்போது பதவியேற்று வருகின்றனர்.உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி என்.வி.ரமணா புதிய நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

அதன்படி,சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,நீதிபதிகள் ரவிக்குமார், பி.வி.நரசிம்மா,அபய் ஓகா,விக்ரம்நாத் ,பிவி நாகரத்னா மற்றும்  3 பெண் நீதிபதிகளானா ஹீமா கோலி,பேலா திரிவேதி,மகேஸ்வரி உட்பட 9 நீதிபதிகள் பதவியேற்று வருகின்றனர்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.