டெல்லி லிவ் இன் பார்ட்னர் கொலையில் ஆப்தாப் விடம் மீண்டும் உண்மை கணடறியும் சோதனை

நாட்டையே அதிரவைத்துள்ள டெல்லி கொலையில் கைதுசெய்யப்பட்டுள்ள அஃப்தாப் அமின் பூனாவாலா மீதான பொய் கண்டறிதல் சோதனை என்றும் அழைக்கப்படும் பாலிகிராஃப் சோதனையின் மீதமுள்ள இரண்டு அமர்வுகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என , PTI செய்தி வெளியிட்டுள்ளது.

பூனாவாலா ஏற்கனவே மூன்று அமர்வுகளுக்கு உட்பட்டுள்ளார், கடைசியாக வெள்ளிக்கிழமை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.அவரது நார்கோ சோதனை டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவித்தன.

அஃப்தாப் தனது லிவ் இன் பார்ட்னர் ஷ்ரத்தா வால்கரை கொடூரமாக கொன்று  அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை அவர் தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி இல்லத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தார்.

பின்னர் பல நாட்களாக அவற்றை நகர் முழுவதும் நகரின் பல இடங்களில் வீசியுள்ளார்.கடந்த நவம்பர் 12 அன்று கைது செய்யப்பட்ட அஃப்தாப்பிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment