மதுரை வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர்- அமைச்சர் சேகர் பாபு..!

தீ விபத்தால் சேதமடைந்த மதுரை வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்துக்கு உள்ளான வீர வசந்தராயர் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தீ விபத்தால் சேதமடைந்த மதுரை வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும். 3 ஆண்டுகளுக்குள் மண்டபம் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.