துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிக நிறுத்தம் – பாதுகாப்புத்துறை அறிவிப்பு

ஏ.எல்.ஹெச் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிப்பு.

ALH துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிக நிறுத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் அருகே மே 4ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ALH துருவ் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரே மாதத்தில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் சம்பந்தப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துகள் நடந்துள்ளாதால் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.